.

Pages

Sunday, January 31, 2016

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் 67 ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 67 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று [ 31-01-2016 ] காலை 9 மணியளவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.ஜலால் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.

வரவேற்புரை நிகழ்த்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

முன்னதாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வீ. இராஜேந்திரன் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரின் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்தி சென்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழ்துறை ஆசிரியர்கள் உமர் பாரூக், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஆதம் செய்யது முஹம்மது புஹாரி, முஹம்மது தமீம், கவுன்சிலர் அப்துல் லத்திப், ஹாஜா பகுருதீன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். இதில் அதிராம்பட்டினம் பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.

1 comment:

  1. வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.