இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.ஜலால் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.
வரவேற்புரை நிகழ்த்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
முன்னதாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வீ. இராஜேந்திரன் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரின் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்தி சென்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழ்துறை ஆசிரியர்கள் உமர் பாரூக், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் ஆதம் செய்யது முஹம்மது புஹாரி, முஹம்மது தமீம், கவுன்சிலர் அப்துல் லத்திப், ஹாஜா பகுருதீன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். இதில் அதிராம்பட்டினம் பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் ஹமீத்கான் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.
வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete