.

Pages

Wednesday, January 27, 2016

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 66 ஆண்டுகள் கழிந்து 67 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் நேற்று காலை 8 மணியளவில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பள்ளி கல்விக்குழு தலைவர் கவுன்சிலர் முஹம்மது ஷெரிப் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் செய்தார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் கலா தேவி நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை லயன்ஸ் சங்கத்தலைவர் என்.ஆறுமுகச்சாமி, செயலாளர் ( பொறுப்பு ) பேராசிரியர் அல்ஹாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, வழக்கறிஞர் அப்துல் முனாப், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் அப்துல் மாலிக், கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், பத்திரிகை நிருபர் சாகுல் ஹமீது, பத்திரிகை நிருபர் ஹசன், சமூக ஆர்வலர்கள் அப்துல் ஜப்பார், ஜாஹிர் ஹுசைன் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.