.

Pages

Thursday, February 11, 2016

முத்துப்பேட்டை பகுதிகளில் பிப். 16,17-ல் குடிநீர் விநியோகம் இருக்காது!

வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், வரும் 16,17-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருவாரூர் பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயன்பெறும் குடிநீர் செல்லும் பிஎஸ்இ குழாய் நீடாமங்கலம்-கும்பகோணம் சாலை, தொழுவூர், மண்டபம், மேட்டுச்சாலை ஆகிய இடங்களில் வரும் பிப். 15,16-ம் தேதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நடைபெறவுள்ளது.

இதனால், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நகராட்சிகள், முத்துப்பேட்டை, தலைஞாயிறு பேரூராட்சிகள், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் வழங்க இயலாது. எனவே, அப்பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.