.

Pages

Wednesday, February 10, 2016

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர் சேர்க்கை 2016-2017

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர் சேர்க்கை 2016-2017

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என் சுப்பையன் அவர்களின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு  வருகிறது என்ற விபரம் பணிந்து தெரிவிக்கலாகின்றது. மேற்படி விளையாட்டு விடுதி மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டரங்கிலும், மாணவியர்களுக்காக சென்னை நேரு உள் விளையாட்டரங்கிலும் செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டுத் தகுதிகள்:
மேற்காணும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த     விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற /பயிலும் மாணவ மாணவியர் தகுதியுடையவர் ஆவர்.

தனிப்போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு/பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள்/அங்கீகரிக்கப்பட்ட கழங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் (SGFI) / கழகங்கள் Federation / National Games சூயவiடியேட ழுயஅநள (தேசிய விளையாட்டுப்போட்டிகள்)/RGKA நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குழுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு/பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள்  கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் இரண்டு  இடங்களில்  வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.  அல்லது மாநில அளவில் தேர்வு பெற்று  தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட  இந்திய பள்ளிகள் விளையாட்டுக் கூட்டமைப்பு / (SGFI ) கழகங்கள் (  தேசிய விளையாட்டுப்போட்டிகள்)/ ( RGKA ) ஊரக விளையாட்டுப்போட்டிகள்) நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்  
         
கையுந்து பந்து விளையாட்டில் 185 செ.மீ.க்கு மேல் உயரமுள்ள மாணவ / மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2016-17-ம் ஆண்டிற்கான சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு கீழ்க்காணும் விளையாட்டுகளில்  மாணவர் / மாணவியர்  சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவர்கள்:
  1 . தடகளம்  2. கூடைப்பந்து  3. குத்துச்சண்டை  4. கையுந்து பந்து
  5.  டேக்வோண்டோ,  6. நீச்சல்,  7. வாள்சண்டை  8.  துப்பாக்கி சுடுதல்
  9.  பளுதுhக்குதல்   11. ஜுடோ,    11. இறகு பந்து  12.மேசைபந்து

மாணவிகள்:
 1 . தடகளம்    2. குத்துச்சண்டை    3. கையுந்து பந்து  4. கால்பந்து
 5.  டேக்வோண்டோ,  6. நீச்சல்,  7. வாள்சண்டை  8.  துப்பாக்கி சுடுதல்
 9.  பளுதுhக்குதல்   11. ஜுடோ,    11. இறகு பந்து  12.மேசைபந்து

www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், சிறப்பு விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தினையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்.  18.02.2016.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலிருந்தும்  விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை 18.02.2016 அன்று மாலை 5.00 மணிக்குள் மேலாளர், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி,  அறை எண் 76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.  மாநில தேர்வு    மாணவ /  மாணவிகளுக்கு இரண்டு நாட்கள் அதாவது 20.02.2016 மற்றும் 21.02.2016 ஆகிய தேதிகளில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும்.  தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவிகள் 20.2.2016 காலை 8.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் சென்னையில் ஆஜராகிட கேட்டுக்கொள்ளப்படுகின்றது. என இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.