.

Pages

Friday, February 12, 2016

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி தலைமை வகித்தார். காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுராஜ் முன்னிலை வகித்தார்.

முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட கல்வி அலுவலர் சிவ.மதிவாணன் முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இதையொட்டி பள்ளி மாணவர்கள் ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதிகளில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ். நாகராஜன் வரவேற்றார். காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் அனுராதா நன்றி கூறினார். இந்த விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.