.

Pages

Saturday, February 20, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் விரிவு படுத்தப்பட்ட 'தமீம் ஆட்டோ ஸ்பேர்ஸ்' நிறுவனம் திறப்பு !

அதிரையை சேர்ந்தவர் முஹம்மது தமீம். இவர் 'தமீம் ஆட்டோ ஸ்பேர்ஸ்' என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது தொழில் நிறுவனத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் அதிரை ஈசிஆர் சாலையில் ( ரைஸ் மில் அருகில் ) உள்ள வணிக கட்டிடத்தில் புதிதாக தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்தனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர் முஹம்மது தமீம் மற்றும் அவரது மகன் உபைதுல்லா அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் முஹம்மது தமீம் நம்மிடம் கூறுகையில்...
'அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில் எங்கள் நிறுவனத்தை விரிவுப் படுத்தி உள்ளோம். எங்களது நிறுவனத்தில் அனைத்து நிறுவன இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். மேலும் மரைன் தொடர்பான அனைத்து வகை சாமான்கள் குறிப்பாக படகு தொடர்பான அனைத்து வகை உதிரி பாகங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். கிரீன்ஸ் நிறுவன அங்கீகாரம் பெற்ற டீலர். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எங்களது தொழில் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு : 984374138
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.