பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கம் காந்திசிலையில் இருந்து தென்னை விவசாயிகளின் கோரிக்கையினை வலியுறுத்தி பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பழனிவேல், தென்னை விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பழனிவேல், மாவட்ட கவுரவ தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர், விவசாய ஆலோசனை குழுவை சேர்ந்த பாலசுப்ரணமயின், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் ராஜரெத்தினம், பாலசுப்ரமணியன், செல்வராஜ், செல்லப்பன், பழனிவேலு, சீனிவாசன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உள்ளிட் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பேராவூரணி, சேதுபவாசத்திரம், ஒரத்தநாடு, மதுக்கூர், திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் துரைமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணிய தேவர் பேரணியை துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
தேங்காய் கொப்பரை கிலோ ரூபாய் 120 என நிர்ணயம் செய்ய வேண்டும், உரித்த தேங்காய்களை கிலோ 40 ரூபாய் என விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியை காட்டுப்படுத்தி வரியினை உயர்த்திட வேண்டும், எண்ணெய்களில் கலப்படம் செய்ய பயண்படும் பார்ம் கர்னல் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும், அரசு மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீனி, வெல்லத்திற்கு மாற்றாக தேங்காயில் இருந்து நீரா என்ற பொருளை தயாரிக்கு தொழிற்சாலையை துவங்க வேண்டும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் அமல் படுத்த வேண்டும், உற்பத்தி செய்யப்படும் அனைத்து கொப்பரைகளையும் கார்டு முறையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கேரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பழனிவேல், தென்னை விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பழனிவேல், மாவட்ட கவுரவ தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர், விவசாய ஆலோசனை குழுவை சேர்ந்த பாலசுப்ரணமயின், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் ராஜரெத்தினம், பாலசுப்ரமணியன், செல்வராஜ், செல்லப்பன், பழனிவேலு, சீனிவாசன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உள்ளிட் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பேராவூரணி, சேதுபவாசத்திரம், ஒரத்தநாடு, மதுக்கூர், திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் துரைமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்ரமணிய தேவர் பேரணியை துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
தேங்காய் கொப்பரை கிலோ ரூபாய் 120 என நிர்ணயம் செய்ய வேண்டும், உரித்த தேங்காய்களை கிலோ 40 ரூபாய் என விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும், பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியை காட்டுப்படுத்தி வரியினை உயர்த்திட வேண்டும், எண்ணெய்களில் கலப்படம் செய்ய பயண்படும் பார்ம் கர்னல் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும், அரசு மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீனி, வெல்லத்திற்கு மாற்றாக தேங்காயில் இருந்து நீரா என்ற பொருளை தயாரிக்கு தொழிற்சாலையை துவங்க வேண்டும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் அமல் படுத்த வேண்டும், உற்பத்தி செய்யப்படும் அனைத்து கொப்பரைகளையும் கார்டு முறையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கேரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.