ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:
ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப்பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:
நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி:தி இந்து தமிழ்
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:
ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப்பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:
நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நன்றி:தி இந்து தமிழ்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.