அதிராம்பட்டினம், பிப். 25
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த கார்த்தி, மாதவன், சிலம்பரசன், சுப்பிரமணியன், சுரேஷ், பன்னீர், மற்றொரு சுரேஷ், விக்னேஷ், அருள் பாண்டி, மகாலிங்கம், நாகூரான், சிவானந்தம், மற்றொரு கார்த்தி ஆகி 13 பேர் 3 விசைப்படகில் அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்தது. அதில் இருந்த இலங்கை கடற்படை வீரர்கள் அதிராம்பட்டினம் மீனவர்களை படகில் இருந்த கயிறு மற்றும் கம்பால் சரமாரி தாக்கினார்கள்.
இதில் மீனவர்கள் நாகூரான், சுரேஷ், சிவானந்தம் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மீனவர்கள் வைத்திருந்த வலைகள், இறால் மீன்களை பறித்து விரட்டியடித்து விட்டு இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர்.
பின்னர் மீனவர்கள் கரை திரும்பினார்கள். பலத்த காயம் அடைந்த 3 பேரும் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இது குறித்து கீழத்தோட்டம் மீனவர்கள் சங்க தலைவர் பால்ராஜ் இந்திய கடலோர காவல் குழுமத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக அதிரை கடலோர காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக ராமேசுவரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறை பிடிக்கும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதிராம்பட்டினம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த கார்த்தி, மாதவன், சிலம்பரசன், சுப்பிரமணியன், சுரேஷ், பன்னீர், மற்றொரு சுரேஷ், விக்னேஷ், அருள் பாண்டி, மகாலிங்கம், நாகூரான், சிவானந்தம், மற்றொரு கார்த்தி ஆகி 13 பேர் 3 விசைப்படகில் அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்தது. அதில் இருந்த இலங்கை கடற்படை வீரர்கள் அதிராம்பட்டினம் மீனவர்களை படகில் இருந்த கயிறு மற்றும் கம்பால் சரமாரி தாக்கினார்கள்.
இதில் மீனவர்கள் நாகூரான், சுரேஷ், சிவானந்தம் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மீனவர்கள் வைத்திருந்த வலைகள், இறால் மீன்களை பறித்து விரட்டியடித்து விட்டு இலங்கை கடற்படையினர் சென்று விட்டனர்.
பின்னர் மீனவர்கள் கரை திரும்பினார்கள். பலத்த காயம் அடைந்த 3 பேரும் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இது குறித்து கீழத்தோட்டம் மீனவர்கள் சங்க தலைவர் பால்ராஜ் இந்திய கடலோர காவல் குழுமத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக அதிரை கடலோர காவல் குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக ராமேசுவரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறை பிடிக்கும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதிராம்பட்டினம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.