இந்நிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் கவுன்சிலர்களிடம் புகார் தெரிவித்தனர். பம்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோயமுத்தூருக்கு பம்ப் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு வந்துவிடும் என பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் மற்றும் பேரூர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் மற்றும் துணை செயலாளர் சேக் அப்துல்லா மற்றும் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் இன்று காலை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் 16,17 வார்டு பகுதிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு விளக்கம் கேட்டும், உடனடியாக குடிநீர் வினியேகம் செய்யக் கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாக உதவியாளர் நாளை அல்லது நாளை மறுநாள் சாம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. எனினும் அதுவரையில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் வரும் திங்கட்கிழமைக்குள் குடிநீர் சீராக கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவட்ட அதிகாரி, முதல்வர் என இப்பிரச்சனை கொண்டு செல்லப்படும் என்று வார்டு பொதுமக்கள் சார்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர நிர்வாகிகள் கூறிச்சென்றனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகர சார்பில் அதிரை பேரூராட்சியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர்திரு செயல்அலுவளார் அவர்கள் இல்லைய உடனே நடவடிக்கை எடுத்துடுவார்களா&
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete