உள்ளிருப்பு போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து போராடிய திமுகவை சேர்ந்த 11 வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் அன்சர்கான் தனது கோரிக்கை குறித்து நம்மிடம் கூறுகையில்....
எனது 11 வது வார்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை கழிவு நீர் வடிகால் சீர் செய்வது, பேரூந்து நிலைய முடிக்க வேண்டிய இதர பணிகளை முடித்துவிட்டு ஏலம் விடுதல், பேரூந்து நிலைய மேற்கூரை அமைப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாடு நிதி ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தகவல் குறித்து பெயர் பலகையை சம்பந்தப்பட்ட பகுதியில் வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டேன்' என்றார்.
கௌன்சிலர் கோரிக்கை வைத்தல் நியமானது அதனை நிறைவேறவில்லை என்றால் சம்பத்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து போராடலாம் துணைக்கு தன் தொகுதி மக்களை அழைத்து வரலாம் அப்படி நடப்பதாக தெரியவில்லை. போட்டி தனிப் பட்டவர் மீதா? அரசியல் கால்புனர்ச்சியா ? அல்லது அமைப்பா? ஒன்றும் அறியாத மக்களிடம் லஞ்சம் கேட்க்கும் அதிகாரிகளை எந்த அமைப்பும் கட்சியும் கண்டுக் கொள்ளாதிருக்கும் போது இத்தகைய போராட்டம் சுயநலனமிக்கது.
ReplyDelete