.

Pages

Saturday, February 13, 2016

உள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர் உம்மல் மர்ஜான் அன்சர்கான் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று [ 12-02-2016 ] பேரூராட்சி அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிரை பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ரபீக்கா முஹம்மது சலீம், ( 17 வது வார்டு ) செளதா அஹமது ஹாஜா ( 19 வது வார்டு  ), உம்மல் மர்ஜான் அன்சர்கான் ( 11 வது வார்டு ) ஜபுரன் ஜெமீலா ( 10 வது வார்டு  ) ஆகியோர் மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து போராடிய திமுகவை சேர்ந்த 11 வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் அன்சர்கான் தனது கோரிக்கை குறித்து நம்மிடம் கூறுகையில்....
எனது 11 வது வார்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை கழிவு நீர் வடிகால் சீர் செய்வது, பேரூந்து நிலைய முடிக்க வேண்டிய இதர பணிகளை முடித்துவிட்டு ஏலம் விடுதல், பேரூந்து நிலைய மேற்கூரை அமைப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாடு நிதி ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தகவல் குறித்து பெயர் பலகையை சம்பந்தப்பட்ட பகுதியில் வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டேன்' என்றார். 

1 comment:

  1. கௌன்சிலர் கோரிக்கை வைத்தல் நியமானது அதனை நிறைவேறவில்லை என்றால் சம்பத்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து போராடலாம் துணைக்கு தன் தொகுதி மக்களை அழைத்து வரலாம் அப்படி நடப்பதாக தெரியவில்லை. போட்டி தனிப் பட்டவர் மீதா? அரசியல் கால்புனர்ச்சியா ? அல்லது அமைப்பா? ஒன்றும் அறியாத மக்களிடம் லஞ்சம் கேட்க்கும் அதிகாரிகளை எந்த அமைப்பும் கட்சியும் கண்டுக் கொள்ளாதிருக்கும் போது இத்தகைய போராட்டம் சுயநலனமிக்கது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.