.

Pages

Friday, February 26, 2016

எஸ்டிபிஐ இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு 2 வது முறையாக அபராதம் விதிப்பு !

கடந்த 01-04-2013 அன்று எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் காவல்துறை அதிகாரி ராஜ்கமல் மற்றும் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறி மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 24-04-2015 அன்று சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடைபெற இருந்தது. இதில் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாமல் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதி போலீசாரை எச்சரித்து புகார்தாரரின் போக்குவரத்து செலவீனங்களுக்காக ரூ 600 அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இல்யாஸ் தரப்பு வழக்கறிஞர் முஹம்மது இஸ்மாயில் ஆஜாராகி இருந்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி ஆஜராகததால் 2 வது முறையாக ரூ 300 அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை எதிர்வரும் 22-04-2016 அன்று ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.