அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சிக்கு பி. சுப்பிரமணியன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் இராம குணசேகரன், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.எஸ் வெங்கடாசலம், தொழில்அதிபர் பழஞ்சூர் K செல்வம், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குழந்தைகள் மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் எஸ். ஹாஜா முகைதீன் ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். இதில் கல்வியின் அவசியம் மற்றும் அதன் பயன் குறித்து பேசினார்.
பட்டுக்கோட்டை நகராட்சி 27 வது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.ஆர் ரகுராமன், பள்ளி சட்ட ஆலோசகர் கே.ஜி சீனிவாசன், மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பி இரமேஷ், நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். மனியரசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளி ஆசிரியை வாசித்தார். இதில் பள்ளியின் சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார்.
விழாவில் கல்வியில் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.
முன்னதாக பள்ளி முதல்வர் என்.உதயகுமார் வரவேற்று சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். விழா முடிவில் பள்ளியின் துணை முதல்வர் திரு எஸ்.சுதாகர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு பி. சுப்பிரமணியன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் இராம குணசேகரன், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.எஸ் வெங்கடாசலம், தொழில்அதிபர் பழஞ்சூர் K செல்வம், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குழந்தைகள் மற்றும் இருதய நோய் சிறப்பு மருத்துவர் எஸ். ஹாஜா முகைதீன் ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். இதில் கல்வியின் அவசியம் மற்றும் அதன் பயன் குறித்து பேசினார்.
பட்டுக்கோட்டை நகராட்சி 27 வது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.ஆர் ரகுராமன், பள்ளி சட்ட ஆலோசகர் கே.ஜி சீனிவாசன், மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பி இரமேஷ், நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். மனியரசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளி ஆசிரியை வாசித்தார். இதில் பள்ளியின் சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார்.
விழாவில் கல்வியில் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.
முன்னதாக பள்ளி முதல்வர் என்.உதயகுமார் வரவேற்று சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். விழா முடிவில் பள்ளியின் துணை முதல்வர் திரு எஸ்.சுதாகர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.