அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 34 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று காலை பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரை நிகழ்த்தினார். இதில் மாணவிகள் தான் கற்கும் கல்வியோடு இறையச்சம், ஒழுக்கம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை கே.ஆர் மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சி.எம் பத்மாவதி ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். இதில் ஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறை குறித்து பேசினார். இதையடுத்து பள்ளி மாணவியருக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கினார். பின்னர் கல்வியில் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பரிசுகள் -சான்றிதல் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 3 ம் இடம் பிடித்த பள்ளி மாணவி பர்வீன் சுல்தானுக்கு கேடயப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசினை தமது பெற்றோருடன் விழா மேடைக்கு வந்து பெற்றுச்சென்றார்.
மேலும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அரசு பொதுத்தேர்வில் சாதனை நிகழ்த்திய மாணவிகளுக்கு கேடயப் பரிசுகளை சமூக ஆர்வலர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி எம். சுராஜ் வாசித்தார். இதில் பள்ளியின் சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ஜி. அகிலா பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார்.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை திருமதி எஸ். நஜீம் வரவேற்புரை ஆற்றினார். நடப்பாண்டில் பணி ஓய்வு பெற உள்ள நஜீம் அவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கபட்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை ஆசிரியை திருமதி விஜயலட்சுமி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை - உதவி தலைமை ஆசிரியை - உடற்கல்வி ஆசிரியை - ஆசிரியைகள் - மாணவிகள் சிறப்பாக செய்தனர்.
இந்த விழாவில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், முஹம்மது ஷரீப், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, அதிரை லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுக சாமி, நூருல் அமீன், முஹம்மது தவ்பீக் உள்ளிட்டோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரியர்கள் - பெற்றோர்கள், பள்ளி அலுவலக பணியாளர்கள் - மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.