.

Pages

Tuesday, February 16, 2016

பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் !

பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்களின் மூன்றாம் நாள் போராட்டத்தில் சாலை மறியல் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்று கண்டன ஆர்பாட்டத்தினை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டம் அறிவித்து தொடர்ந்து மூன்று நாள் ஆகியும் தமிழக அரசு தங்களை அழைத்து பேசவில்லை என்றும், தங்களின் 20 அம்ச கோரிக்கை நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் வெவ்வேறு வகையில் தொடர்ந்து நடைபெறும் என்றும் போராட்டகாரர்கள் கூறினர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடைபெற்ற பேராட்டத்தின் முடிவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா,பட்டுக்கோட்டை
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.