.

Pages

Tuesday, February 16, 2016

துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் குப்பைகள் அள்ளுவதில் சுணக்கம் !

அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குவியும் குப்பை கூளங்கள், கழிவுகளை அதிரை பேரூராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் நிரந்த ஊழியர்கள் 22 பேர்களும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் 53 பேர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இரு வேறு குழுக்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ 230 வீதம் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பணியாற்றி ஊழியர்களின் சிலருக்கு ஊதியத்தில் சில நாட்கள் பிடித்தம் செய்துகொண்டு ஊதியம் வழங்கியதால் அதிருப்தி அடைந்த தற்காலிக ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் கடந்த 12-02-2016 அன்று காலை முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிரையின் பிரதான இடங்களில் குப்பை, கூளங்கள் அள்ளிச்செல்வதில் சுணக்கம் ஏற்பட்டது.

அதிரையின் சில பகுதிகளில் நேற்று ( 15-02-2015 ) பகல் எடுத்த குப்பைகளின் படங்கள்.
 

கடைசி செய்தி: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் இன்று காலை முதல் மீண்டும் பணியை தொடங்கியுள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.