.

Pages

Wednesday, February 10, 2016

இந்தியா வந்தார் அபுதாபி இளவரசர் !

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் (54), மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

டெல்லிக்கு விமானம் மூலம் மாலை 6 மணியளவில் இளவரசர் வந்தடைந்தார். டெல்லி வந்த ஷேக் முகமதை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று  வரவேற்றார். ஷேக் முகமது உடன் அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் இந்தியா வந்துள்ளனர்.

இந்த பயணத்தின் போது  இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மேலும் நாளை பிரதமர் உடனான இளவரசரின் சந்திப்பின் போது, இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல கோடி ரூபாய் முதலீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.

1 comment:

  1. பட்டத்து இளவரசர் இந்தியாவிற்கு வந்திருப்பதும் ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கும் சந்தோஷமான செய்தி தான். இந்தியாவில் முதலீடு திட்டங்கள் ஏட்டோடு இல்லாமல் சிகரத்தை எட்டினால் நாடு வளர்ச்சியடையும்.. மரபுகளை மீறி நம் பிரதமர் மோடி இளவரசரை வரவேற்றிப்பது மற்றற்ற மகிழ்ச்சி.- தொடரட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.