டெல்லிக்கு விமானம் மூலம் மாலை 6 மணியளவில் இளவரசர் வந்தடைந்தார். டெல்லி வந்த ஷேக் முகமதை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். ஷேக் முகமது உடன் அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் இந்தியா வந்துள்ளனர்.
இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மேலும் நாளை பிரதமர் உடனான இளவரசரின் சந்திப்பின் போது, இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல கோடி ரூபாய் முதலீடு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.
பட்டத்து இளவரசர் இந்தியாவிற்கு வந்திருப்பதும் ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கும் சந்தோஷமான செய்தி தான். இந்தியாவில் முதலீடு திட்டங்கள் ஏட்டோடு இல்லாமல் சிகரத்தை எட்டினால் நாடு வளர்ச்சியடையும்.. மரபுகளை மீறி நம் பிரதமர் மோடி இளவரசரை வரவேற்றிப்பது மற்றற்ற மகிழ்ச்சி.- தொடரட்டும்.
ReplyDelete