.

Pages

Monday, February 29, 2016

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா - நர்சரி குழந்தைகளின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா மற்றும் நர்சரி குழந்தைகளின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் கலந்துகொண்டு நர்சரி குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், டாக்டர் செல்லப்பன், வழக்கறிஞர் பிரகாஷம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இதில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பணமுடிப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக பள்ளி ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஈஸ்வரன் வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டார்.

வரவேற்புரையை நர்சரி பள்ளி தலைமை ஆசிரியை பாலாம்பிகா வழங்கினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியைகள் ஸ்ரீதேவி, கவிதா, வேல்முருகன், யாஸ்மின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.