.

Pages

Thursday, February 25, 2016

அதிரையில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 525 பேர் பங்கேற்பு!

அதிரை லயன்ஸ் சங்கம் - மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் இன்று [ 25-02-2016] காலை நடந்தது.

இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமில் அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் பொதுமக்கள் மொத்தம் 525 பேர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். இதில் 64 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி, செயலாளர் பேராசிரியர் அல் ஹாஜி, பொருளாளர் எஸ்.ஏ.சி இர்பான் சேக், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எஸ்.எம். முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, சாகுல் ஹமீது, செல்வம், முத்துகிருஷ்னன், சாகுல்ஹமீது உள்ளிட்டோர் செய்தனர். 

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியை அனுராதா தலைமையில் பள்ளி மாணவிகள், லியோ கிளப் பொறுப்பாளர்கள் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, காதர் முகைதீன் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் முகாமில் ஆலோசனை பெற வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்தனர்.

இதுகுறித்து லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் நம்மிடம் கூறியதாவது...
மாலை 5 மணி வரை நீடித்த இன்றைய முகாமில் 525 பேர் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் முழுமையான கண் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. இதில் 64 பேர் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு, இவர்கள் அனைவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். கண் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பத்திரமாக அவரவர் வீடு வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
 

2 comments:

  1. May Allah bless for your noble efforts.

    ReplyDelete
  2. இலவச கண் பரிசோதனை முகாம் எல்லாமே சரிதான்...
    பெண்களுக்கென்று பெண் மருத்துவர் இல்லையா?? இந்தப் பதிவை பார்த்தால் புரியும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.