.

Pages

Sunday, February 21, 2016

பாராசூட் குழுவினர் தஞ்சை வருகை !

நாடு முழுவதும் வானில் பயணம் செய்யும் மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட் குழுவினர் தஞ்சாவூர் விமானப்படை நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.

இந்திய விமானப்படையைச் சார்ந்த பாராசூட் குழுவான வான் ஓட்டுநர்கள் பிரதக்ஷினா என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 10,000 கி.மீ.க்கும் மேலாக வானில் பயணம் செய்யும் நிகழ்ச்சி புது தில்லி அருகேயுள்ள குர்கான் பகுதியில் ஜன. 28-ம் தேதி தொடங்கியது. இந்த பாராசூட் குழு தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் குழுவை நிலையத் தளபதி ஆர்.வி. ஷிண்டே வரவேற்றார். இந்தக் குழுவில் இந்திய விமானப் படையின் சாகச இயக்ககத்தைச் சேர்ந்த அணித் தளபதி எம்.பி.எஸ். சோலன்கி தலைமையில் பாராசூட் இயக்குபவர், உதவியாளர்கள் உள்பட 14 வான்படை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.