.

Pages

Wednesday, January 4, 2017

ஆர்டிஓ / வட்டாட்சியர் அலுவலகங்களில் 'ஆன்லைன் கோரிக்கை மனு பதிவு' மையம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் இணைய வழி கோரிக்கை மனு பதிவு ( Online GDP Petition Receiving Centre) மையம் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகிது என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புதிதாக இணைய வழி கோரிக்கை மனு பதிவு மையத்தில் (Online GDP Petition Receiving Centre) மனுக்கள் பதிவு செய்யப்படுவதை பொது மக்கள் ஆர்வமுடன் பதிவு செய்து ரசீது பெற்று செல்கின்றனர். இதே போன்று தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை  ஆகிய  வருவாய் கோட்டாட்சியர், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இணைய வழி கோரிக்கை மனு பதிவு மையம் அமைக்கப்பட்டு இணைய தளம் மூலமாக பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.  இம்மனுக்கள் அனைத்தும் (Online)  ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டதற்கான ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வேலை நாட்களிலும், மனுக்கள் பெறப்பட்டு இதற்கான ஒப்புதல் ரசீது ஆன்லைன் மூலமாக மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில், பொது மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுவை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.