அதிரை நியூஸ்: ஜன-10
சவுதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரின் வடக்கு அல் யாஸ்மீன் மாவட்டத்தில் வசிப்பவர் சாலம் பின் யஸ்லாம் அல் சயாரி, இவருடைய மகன் தாயியா மற்றும் இவரது கூட்டாளி தலால் பின் அல் சம்ரான் அல் சயீதி ஆகியோரை சனிக்கழமையன்று தடை செய்யப்பட்ட பயங்கர ஆயூதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது சவுதி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் தனது மகனின் மரணத்திற்காக இரங்கல், அனுதாபம் தெரிவிப்பதை ஏற்க மறுத்துள்ளார் சுட்டுக்கொல்லப்பட்ட தாயியாவின் தந்தை. என் மகன் வழிதவறி சென்றுவிட்டான், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும், நாட்டிற்கு எதிராகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், தீவிரவாதத்திற்கு எதிரான என்னுடைய அறிவுரைகளை ஏற்க மறுத்ததாலும் அவனுடைய இறப்பிற்காக எங்கள் குடும்பம் இரங்கப்போவதுமில்லை, பிறரின் அனுதாபத்தையும் ஏற்கவும் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நியூஸிலாந்து நாட்டிற்கு படிப்பதற்காக சென்ற தனது மகன் விடுமுறையில் வீட்டிற்கு வராமல் நேராக சிரியா சென்றதாகவும் பின்பு நாடு திரும்பிய நிலையில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் வீட திரும்பாததால் தாயியாவின் நடவடிக்கைகள் குறித்து சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றதே தந்தை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உங்களுடைய பிள்ளைகளின் போக்குகளில் வித்தியாசமான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால் அதை உடனே பாதுகாப்பு துறைக்கு தெரிவித்தால் அவர்களுக்கு ஆரம்பநிலையிலேயே தேவையான நல் ஆலோசணைகளை கூறி மீண்டும் அவர்களை உங்கள் குடும்பத்துடன் சேர்க்க ஏதுவாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரின் வடக்கு அல் யாஸ்மீன் மாவட்டத்தில் வசிப்பவர் சாலம் பின் யஸ்லாம் அல் சயாரி, இவருடைய மகன் தாயியா மற்றும் இவரது கூட்டாளி தலால் பின் அல் சம்ரான் அல் சயீதி ஆகியோரை சனிக்கழமையன்று தடை செய்யப்பட்ட பயங்கர ஆயூதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது சவுதி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் தனது மகனின் மரணத்திற்காக இரங்கல், அனுதாபம் தெரிவிப்பதை ஏற்க மறுத்துள்ளார் சுட்டுக்கொல்லப்பட்ட தாயியாவின் தந்தை. என் மகன் வழிதவறி சென்றுவிட்டான், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும், நாட்டிற்கு எதிராகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலும், தீவிரவாதத்திற்கு எதிரான என்னுடைய அறிவுரைகளை ஏற்க மறுத்ததாலும் அவனுடைய இறப்பிற்காக எங்கள் குடும்பம் இரங்கப்போவதுமில்லை, பிறரின் அனுதாபத்தையும் ஏற்கவும் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நியூஸிலாந்து நாட்டிற்கு படிப்பதற்காக சென்ற தனது மகன் விடுமுறையில் வீட்டிற்கு வராமல் நேராக சிரியா சென்றதாகவும் பின்பு நாடு திரும்பிய நிலையில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் வீட திரும்பாததால் தாயியாவின் நடவடிக்கைகள் குறித்து சவுதி அரேபியாவின் பாதுகாப்புத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றதே தந்தை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உங்களுடைய பிள்ளைகளின் போக்குகளில் வித்தியாசமான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால் அதை உடனே பாதுகாப்பு துறைக்கு தெரிவித்தால் அவர்களுக்கு ஆரம்பநிலையிலேயே தேவையான நல் ஆலோசணைகளை கூறி மீண்டும் அவர்களை உங்கள் குடும்பத்துடன் சேர்க்க ஏதுவாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.