.

Pages

Friday, August 3, 2018

ஆற்று நீர் இன்று (ஆக.03) பட்டுக்கோட்டை வந்தடைந்தது (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஆக.03
தமிழக முதலமைச்சர் ஆணையின்படி 2018-19ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஜூலை 19 ம் ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்பின்னர், டெல்டா சாகுபடிக்காக கல்லணை கால்வாயிலிருந்து கடந்த ஜூலை 22ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டன.

பட்டுக்கோட்டை கடைமடை பகுதி விவசாயிகள் ஆற்று நீர் வருகையை எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று (ஆக.03) வெள்ளிக்கிழமை மாலை  பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் ஆற்று நீர் வந்தடைந்தது. இதனால் ஆற்று கரையோரப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் கூறியது;
பட்டுக்கோட்டை பகுதிக்கு ஆற்று நீர் இன்று வெள்ளிக்கிழமை மாலை வந்தடைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விவரங்கள் அறிய கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆற்றுப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 4 மணி நேரங்கள் ஆவுவதாகவும், இன்னும் சில தினங்களில் ஆற்று நீர் பிற பகுதிகளுக்கு செல்ல இருப்பதாகவும் கூறினார். மேலும், அதிராம்பட்டினம் பகுதியில் வறண்டு காணப்படும் குளங்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க கேட்டுள்ளோம். அதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் வரும் வாய்க்கால் பாதைகளில் உள்ள அடைப்புகள் சீரமைக்கப்பட்டு தயாராக இருக்கும் விவரத்தை தெரியப்படுத்தி உள்ளோம்' என்றார்.
 

1 comment:

  1. பட்டுக்கோட்டை பகுதிக்கு ஆற்று நீர் வருவதை கேள்வி பட்டு பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அதிரை நியூஸ் சார்பாக நானும் சென்று இருந்தேன் நீர் சம்மந்தமாக நீர்னிலை அறக்கட்டளை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதிரைக்கு தண்ணீர் வரும் தகவல்களை கேட்டுக் கொண்டனர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.