.

Pages

Saturday, August 4, 2018

தஞ்சை மாவட்டத்தில் வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற இணையவழியில் விண்ணப்பிக்க புதிய வசதி அறிமுகம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 276 இ-சேவை மையங்கள் மூலமாக தற்போது 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள் பட்டா மாறுதல் மற்றும் சமூகநலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படும் 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களான விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய சேவைகளை தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட 20 வகையான சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரியை அணுகவும்.  மேலும் UMANG என்னும் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமான சான்றிழ், சாதி சான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் கைப்பேசி மூலமாக விண்ணப்பித்து பெறலாம்.  இதற்கான சேவை கட்டணமாக ரூ.60/-ஐ இணையதள வங்கி முறை அதாவது இண்டர்நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.