அதிராம்பட்டினம், ஆக. 03
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை, இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் ஆகியன இணைந்து தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்க ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. அன்பழகன் தலைமை வகித்து பேசியது;
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவாக தாய்ப்பால் விளங்குகிறது. தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை பிற்காலத்தில் நீரழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகிய நோய்கள் தாக்குவது குறைவு. தாய்ப்பால் 2 வயது வரை தொடர்ந்து கொடுப்பதனால் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும்' என்றார்.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை பிரசிவித்த அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த சுபாவதி என்கிற பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், நோயாளிகளுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் பிரட் பாக்கெட் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
விழாவில், தாய்ப்பாலின் அவசியம் குறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்க ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர் வி. புகழேந்தி, இந்திய மருத்துவச் சங்க தலைவர் டாக்டர் பத்மானாந்தன், செயலாளர் டாக்டர் காமராஜ், பட்டுக்கோட்டை குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கெளசல்யா, ஏ.சீனிவாசன், கே.கலைவாணி, சி.செரின் பேகம், சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தன், அதிரை சமூக பண்பலை வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் முகமது இத்ரீஸ் ஆகியோர் பேசினர். முடிவில் மருத்துவமனை நோயாளி நல ஆலோசகர் ஜெயபாரதி நன்றி கூறினார்.
இவ்விழாவில், அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் எம்.எப் முகமது சலீம், எம். அகமது அனஸ், மருத்துவமனை பணியாளர்கள் சீதா, ராஜேஸ்வரி, ராஜலெட்சுமி, வினோதகன், பன்னீர் மற்றும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை, இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் ஆகியன இணைந்து தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்க ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. அன்பழகன் தலைமை வகித்து பேசியது;
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவாக தாய்ப்பால் விளங்குகிறது. தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை பிற்காலத்தில் நீரழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகிய நோய்கள் தாக்குவது குறைவு. தாய்ப்பால் 2 வயது வரை தொடர்ந்து கொடுப்பதனால் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும்' என்றார்.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை பிரசிவித்த அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த சுபாவதி என்கிற பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், நோயாளிகளுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் பிரட் பாக்கெட் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
விழாவில், தாய்ப்பாலின் அவசியம் குறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்க ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர் வி. புகழேந்தி, இந்திய மருத்துவச் சங்க தலைவர் டாக்டர் பத்மானாந்தன், செயலாளர் டாக்டர் காமராஜ், பட்டுக்கோட்டை குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கெளசல்யா, ஏ.சீனிவாசன், கே.கலைவாணி, சி.செரின் பேகம், சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தன், அதிரை சமூக பண்பலை வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் முகமது இத்ரீஸ் ஆகியோர் பேசினர். முடிவில் மருத்துவமனை நோயாளி நல ஆலோசகர் ஜெயபாரதி நன்றி கூறினார்.
இவ்விழாவில், அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் எம்.எப் முகமது சலீம், எம். அகமது அனஸ், மருத்துவமனை பணியாளர்கள் சீதா, ராஜேஸ்வரி, ராஜலெட்சுமி, வினோதகன், பன்னீர் மற்றும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.