அதிராம்பட்டினம், ஆக 09
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளை ரயில்வே உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை வாரம் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை) இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வரையில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை, தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து ஆகியோர் இன்று வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம் வழித்தடத்தில் உள்ள பாலங்கள், தண்டவாளம் அமைப்பு, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளை ரயில்வே உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை வாரம் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை) இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வரையில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை, தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து ஆகியோர் இன்று வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம் வழித்தடத்தில் உள்ள பாலங்கள், தண்டவாளம் அமைப்பு, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.