.

Pages

Sunday, August 4, 2013

பெரிய ஜும்மாப் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் AAMF'ன் நிர்வாகிகள் பங்கேற்பு !

இன்று [ 04-08-2013 ] ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நமதூர் பெரிய ஜும்மாப் பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பாக பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












முன்னதாக அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் தலைவரும், மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கத் தலைவருமாகிய M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் 'புனித ரமலான் மாதத்தின் சிறப்புகள்' குறித்து சிற்றுரை நிகழ்த்தினார். இறுதியில் கவிஞர் தாஹா அவர்களின் துஆவுடன் நோன்பு திறக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பின் பேரில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த  அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் பெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பாக அதன் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், P.M.K. தாஜுதீன், மா. செ. ஜபருல்லாஹ், B. ஜமாலுதீன், N.M. சம்சுல் மன்சூர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1 comment:

  1. மகிழ்ச்சியான செய்தி...

    ஆனால் இப்தார் நேரங்களில் அதிகமதிகம் இறைவனிடத்தில் கெஞ்சி பிரார்த்தியுங்கள் என்று இஸ்லாம் சொல்ல மைக்கை பிடித்து சமுதாயத்தின் தனது சேவையையும் நிறை,குறைகளையும் வர்ணிக்கும் நேரமா இது? இதை இப்தார் நேரத்தில்தானா செய்வது முன்பே ஆரம்பித்து பின்பு இப்தார் நேரத்தில் பிரர்த்திக்கலாமே...சமுதாய சிந்தனைவாதிகளே மறுமையையும் சிந்தித்து செயல்படுவீர்!

    “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

    நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” -(பைஹகி)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.