அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மேலத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2008-2009 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
அதே போல் மற்றுமொரு சுகாதார வளாகம் காட்டுப்பள்ளி தெருவில் கடந்த 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 9 லட்சம் ஒதுக்கீட்டில் ஆண் - பெண் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்த சுகாதார வளாகத்தை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
பேரூராட்சி மன்ற நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா !?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
கட்டிமுடித்து நீண்ட நாட்களாகியும் இந்த சுகாதாரவாளகத்தை திறக்காததன் காரணம் என்ன ..? என்பதை அந்த தெரு வார்டு மெம்பர்கள் தான் விபரத்தை அறிந்து விரைவில் திறக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
ReplyDeleteகாட்டுப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகதார வளாகத்திற்க்கு இன்னும் மின்சார வசதி செய்யப்படவில்லை,மின் இணைப்பு பேருராட்சின் அதிகாரியின் பெயரில் தான் பெற் முடியும், அவ்வாறு இணைப்பை பெறுவதற்கு கீழத்தெரு முஹல்லாவின் கடிதம் தேவை படுகிறது, முஹல்லா கடிதம் கொடுக்க தாமதம் செய்வதால்., சுகாதார வளாகம் திறப்பத்ற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது..
ReplyDeleteKattu palli street reason ok then What happened to west street toilet room ?
ReplyDeleteKattu palli street reason ok then What happened to west street toilet room ?
ReplyDeleteகீழத்தெரு வளாகத்தில் உள்ள சுகாதார மையம் விரைவில் திறக்கப்படும் என்று தெரு மெம்பர் லத்திபு சொன்னார்......
ReplyDelete