கடந்த சில தினங்களாக நமதூர் செய்னாங் குளத்தின் புரனமைப்புப் பணி நடந்து வருகிறது. அப்போது ஜே சி பி இயந்திரம் கொண்டு பள்ளம் வெட்டும் போது தொலைத்தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் கடந்த மூன்று தினங்களாக இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வீடுகள்,கடைகள்,அலுவலகளில் தொலைத்தொடர்பு இணைப்பு இல்லாமல் பாதிப்படைந்து உள்ளது. இதில் அதிரை நியூஸின் அலுவலகமும் அடங்கும்.இது குறித்து தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். ஆகவே உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள் உடனுக்குடன் தருவதில் கால தாமதம் ஏற்படுகிறது என்பதினை உலகெங்கிலும் உள்ள அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
என்றும் அன்புடன் அதிரை நியூஸ் தலைமை நிர்வாகக்குழுவினர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.