.

Pages

Saturday, August 31, 2013

குடிநீர் சீராக வழங்கக் கோரி அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் !

நமதூர் கடல் கரைத்தெரு,ஹாஜா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை எனக் கோரி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

6 comments:

  1. அதிரை வரலாற்றில் இதுபோன்று பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததில்லை

    வெட்கம்... வெட்கம்...

    ReplyDelete
  2. அதிரை வரலாற்றில் இதுபோன்று பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததில்லை

    வெட்கம்... வெட்கம்

    ReplyDelete
  3. Good awareness! ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்தால் அரசாங்க வேலைகளை உறுப்பினர்கள் உடனடியாக செய்து தர்றதா சொல்றாங்களே? தண்ணிப் பிரச்சினையை அவங்க கவனத்துக்கு போகலையா?

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    குடிநீர் இல்லாவிட்டால் பின்பு சிறு நீர் சரியாக வராது, அப்புறம் கிட்னி?

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. Annan shamugam potrorukku erukum agathagamm namakkelam ellamal ponnathu mehavum vethanaii vekkam

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.