
சரி விசயத்திற்கு வருவோம்...
வாசகர்களின் எண்ணிக்கை :
நூலகத்தின் கட்டிடம் :
கட்டிடம் இன்றைய நிலையில் பராமரிப்பின்றி சுவற்றில் காணப்படும் வெடிப்புகளாலும், உப்புக்கற்றால் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு கீழே இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. நீண்ட காலமாக பெயின்ட் பூசாமல் இருப்பதால் நூலக கட்டிடம் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன.
நூலகத்தின் வசதிகள் :
அறிவிப்பு பலகை :
நூலகம் குறித்த வாசகர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரும் ‘அறிவிப்புப் பலகை’யை அனைவரின் பார்வையில் படுமாறு நூலகத்தில் இடம்பெறுவது அவசியம்.
1. நூலகக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதன் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தலாம்.
2. வாசிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
3. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் கடைகோடியில் அமைந்து இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஊரின் மத்தியில் கிளை நூலகம் ஒன்றை ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.
4. நூலகத்தில் புத்தகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம்.
5. புரவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு நூலகத்திற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
6. நமதூரைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து நிதி உதவிப் பெற்று நூலகத்திற்கு தேவையான பெயின்ட் அடித்தல், குடிநீர் வசதி மற்றும் இன்னபிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணற்ற தகவல்கள் இன்று வலைதளங்களின் உதவியால் விரைந்து கிடைக்கின்றன. உலகின் எந்த நூலகத்தில் உள்ள நூல்களையும் "மவுஸி'ன் மூலம் "கிளிக்' செய்தால் இருக்கும் இடத்தில் இருந்தே படிக்க முடிகிறது. இன்டர்நெட் மூலமாக மின் புத்தக நிலையங்களில் புத்தகங்களை நமக்கு நாமே வாங்கும் சூழல் இருந்தாலும் கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும் என்பதை மனதில் இருத்தி பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது.
இதற்காக நாம், நூலகம் தரும் பயன் அறிந்து அங்கு சென்று நூல்கள் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.
சேக்கனா M. நிஜாம்
Nanbarr nijam udaiya noolaham patriya seythii Meeha Arumaai thoodarattum ungal samuha pani. Best wishes - MMS Siraj
ReplyDeleteபள்ளிக்காலத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் நூலகம் இருந்த போது தினமும் செல்வோம். பாட புத்தகம் கூட அங்கேர்ந்து எடுத்துவந்து வீட்டில் படித்திருக்கோம். ஆனால் இன்று..
ReplyDeleteநூலகம் என்ற ஒன்று இருப்பதே நினைவு காட்டப்படுகிறது..
ஊரின் ஒதுக்குப்புறம் இருப்பது ஒன்று மட்டுமே யாரும் பயன்படுத்தாமைக்கு காரணமாக இருக்கிறது..
நூலகம் பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி.
ReplyDeleteநூலகத்தில் சென்று பல புத்தகங்கள் படிப்பது பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். பண்டைய காலத்தில் நூலகங்களில் இருக்க இடமில்லாமல் நிரம்பிக்கிடக்கும். நவீன சாதனங்கள் நம் கைகளில் வந்து விட்டதால் அதன் நாட்டங்கள் குறைந்து விட்டது என்பதே உண்மை.
நூலகம் என்ற ஒன்று இருப்பதே நினைவு காட்டப்படுகிறது..
ReplyDeleteஊரின் ஒதுக்குப்புறம் இருப்பது ஒன்று மட்டுமே யாரும் பயன்படுத்தாமைக்கு காரணமாக இருக்கலாம் .
நூலகம் என்ற ஒன்று இருப்பதே நினைவு காட்டப்படுகிறது..
ReplyDeleteஊரின் ஒதுக்குப்புறம் இருப்பது ஒன்று மட்டுமே யாரும் பயன்படுத்தாமைக்கு காரணமாக இருக்கலாம் .
நூலகத்தில் சென்று பல புத்தகங்கள் படிப்பது பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். நவீன சாதனங்கள் நம் கைகளில் வந்து விட்டதால் அதன் நாட்டங்கள் குறைந்து விட்டது என்பதே உண்மை.
ReplyDelete