.

Pages

Tuesday, August 27, 2013

அதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு !

அதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று இன்று [ 27-08-2013 ] மாலை 6 மணியளவில் நமதூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் எதிர்வரும் 12-09-2013 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் சதுர்த்தி’ ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் தங்களுடைய ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்று அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டன.

இந்தக்கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் நிர்வாக கமிட்டியினர், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவரையும் அதிரை காவல்துறையினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.


3 comments:

  1. பதிவுக்கு நன்றி, அசதிட்டியே போங்கே....!!!
    இருந்தாலும் காவல் துறையினர் என்னன விசயங்களை பற்றி விவரித்தார்கள் என்று விரிவாக எழுதிர்க்காலம்

    ReplyDelete
  2. முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் வரவில்லை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.