.

Pages

Monday, August 19, 2013

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் யாகம் ! த.மு.மு.க வினர் முற்றுகை !




முத்துப்பேட்டையில் பேரூராட்சியில் அலுவலகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக நாகராஜ் என்பவர் பொறுப்பேற்றார். திடீரென்று பணியில் இருக்கும்பொழுது மாரடைப்பால் மரணம் அடைந்தார். காரணம் அலுவலக நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்ததாலும், வரவு - செலவு கணக்கில் தணிக்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் மனஅழுத்தம் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக பொறுப்பு ஏற்ற பாலசுப்ரமணியன் ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு பொறுப்பேற்ற நந்தகுமார் மனஉளைச்சல் காரணமாக பணி செய்ய விரும்பாமல் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பொறுப்பேற்ற சித்தி விநாயகமூர்த்தி அலுவலகத்தில் ஒத்துழைப்பு இல்லாததால் அவரும் சென்றதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற சிவராமன் உடல்நிலை காரணமாக சென்று விட்டதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற இப்ராகிம் என்பவர் இந்த சம்பவங்களெல்லாம் கேள்விபட்டு பொறுப்பேற்று இதுநாள் வரை தனது அறையில் அமரவில்லை என்று தெரிகிறது.

மேலும், பேரூராட்சி தலைவராக உள்ள அருணாச்சலதுக்கு சில மாதங்கள் முன்பு உடல்நிலை சரியில்லாமால் பல மாதங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை. பேரூராட்சி திமுக கவுன்சிலர் ஐயப்பன் சென்ற மாதம் விபத்தில் சிக்கி படுகாயம், பேரூராட்சி மதிமுக கவுன்சிலர் மதியழகன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லை, சில தினங்களுக்கு முன்பு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து பேரூராட்சி பணியாளர் ராஜா ஆகியோருக்கு விபத்தில் சிறு காயம், மேலும் பேரூராட்சி பணியாளர்கள் கவுன்சிலர்களுக்கு மன உளைச்சல், கடன்தொல்லை, குடும்பத்தில் தொல்லை இப்படி தொடர்ந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் - கடவுள் குத்தம் இருக்குமோ என்று கருதி அலுவலகத்தில் கணபதி ஓமம் நடத்த முடிவு செய்தது.

அதன்படி ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணிக்கு புரோகிதர்களை கொண்டு கணபதி ஓமம் பேரூராட்சி அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்திற்க்கு கழுத்தில் மாலை போட்டு தோஷம் கழிக்கப்பட்டது. பின்னர் புனிதநீரை அலுவலகத்திற்கு சுற்றுப்புறமும் புரோகிதர் தெளித்தார்.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இதனால் ஏராளமான மக்கள் கூடினர். அப்பொழுது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நகர தலைவர் நெய்னா முகம்மது தலைமையில் ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக், உரிமை மீட்பு இயக்கம் மாநில நிர்வாகியும் சமூக ஆர்வலருமான நிஜாமுதீன் உட்பட தமுமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுக்க முயற்சித்தனர்.

இதனால் பெறும் பரபரப்பானது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தனிபிரிவு  காவலர் குணசேகரன் உட்பட போலீசார்  முற்றுகையிட்ட த.மு.மு.க வினரிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். பிறகு உரிய விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

- இரா.பகத்சிங்
நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.