.

Pages

Wednesday, July 2, 2014

ஆஸ்பத்திரித்தெரு புதுப்பள்ளியில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சியை ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் பொதுமக்கள் !

ஆஸ்பத்திரித்தெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்துவருகிறது.

நாள் ஒன்றுக்கு 20 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் ஹிஜ்பு மற்றும் இரவு தொழுகை ( வித்துரு ) நடைபெற்று வருகிறது.








நோன்பு கஞ்சிக்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் கீழ் கண்ட நோட்டிசில் குறிபிடப்பட்டுள்ள நபர்களை தொடர்பு கொண்டு உதவலாம்.

3 comments:

  1. பெரும்பாலான சிறுபிள்ளைகள் பள்ளிகளுக்கு கஞ்சி வாங்க கொண்டுவரும் டிப்பன் பாசில் (நம்மஊருபாசையில் ) மூடி கிடையாது தெரு தூசுகள் மண்ணுகள் கஞ்சியில் விழாமல் இருக்க கஞ்சி வாங்கும் பாத்திரங்களுக்கு மூடிகொடுத்து விடவும்.

    கஞ்சி வாங்கி செல்லும் சிறுபிள்ளைகள் தெருவில் உள்ள மாடுகளுக்கு பயந்து மணிக்கணக்கில் நிற்கும் இதைபார்க்க வேடிக்கையுடன் கூடிய பரிதாபமாக இருக்கும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.