.

Pages

Monday, January 19, 2015

360 டிகிரி கோணத்தில் துபாய் நகரை நேரில் காணும் வசதி அறிமுகம் !

360 டிகிரி கோண புகைப்பட கலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வரும் நிலையில், இந்த தொழில் நுட்பம் தற்பொழுது துபாய் நகரை காணும் வகையில் அறிமுகம் செய்யப்படுள்ளது. துபாய் 360 டிகிரி ஏரியல் வியுவை http://dubai.globalvision360.com என்ற லின்கில் சென்று காணலாம். உலக‌த்தில் எந்த மூலையில் இருந்தும் உங்களது கணினியின் முன் அமர்ந்து, அல்லது உங்கள் கைபேசியில் இணையதள வசதியுடன் துபாயில் உள்ள முக்கியமான இடங்களை 360 டிகிரி கோணத்தில் நம்மால் இனி பார்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தைக்கொண்டு 130 அடி உயரத்தில் இருந்து நம்மால் இனி துபாய் நகரில் உள்ள முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

துபாயில் புதிதாக துவங்க உள்ள‌ குளோப‌ல் விஷன் என்ற நிறுவனம் இந்த வசதியை தற்பொழுது துபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலீஃபா முதல் ஜுமைரா பாம் தீவுகள் வரை அனேக இடங்களை நேரில காண்பது போன்ற உணர்வுடன் காண இயலும். இந்த தொழில்நுட்பத்தை பயன் படுத்தி நாம் உயரத்தில் பறக்கும் ஒரு பறவையின் கண்களைக்கொண்டு காண்பதைப்போல கணிணி மூலம் கீழுள்ளதைக்காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பனிரெண்டிற்கும் அதிகமான இடங்கள் பானோரமா 360 டிகிரி கோணத்தில் காட்சிகள் தற்பொழுது காட்சிக்காக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் காண்பவர்களின் வசதிக்காக விக்கீபீடியா வசதியும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குளோபல் விஷன் நிறுவன‌ம் தெரிவித்துள்ளது.

துபாயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தங்களது சேவையின் ஒரு முன்னோட்டமாகவே இந்த முயற்சி எனவும், இதற்காக அதிநவீன கேமராக்கள் மற்றும் கருவிகள் பயன்படுதப்பட்டு இந்த புகைப்படங்கள் வடிவமைக்கப்படுள்லது எனவும் சுவிட்ச‌ர்லாந்தை தலைமையாக கொண்டுள்ள குளோப‌ல் விஷன் நிறுவன‌ம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.