.

Pages

Sunday, January 18, 2015

முத்துப்பேட்டையில் தடையை மீறி மீலாது நபி பொதுக்கூட்டம் நடத்திய 4-பேர் மீது போலீஸ் வழக்கு!

முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் மாலை அணைத்து முஸ்லீம் ஜமாஅத் சார்பில் மீலாது நபி பொதுக்கூட்டம் முகைதீன் பள்ளி வாசல் திடலில் நடைப்பெற்றது. அதற்கு கூட்டம் நடத்தியவர்கள் முறைப்படி அனுமதி பெற்று இருந்தனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை காவல் துறை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி திடீரென்று அந்த கூட்டத்திற்கு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி கூட்டம் நடத்துவோம் என்று ஜமாத்தினர் அறிவித்து கூட்டத்தை நடத்தினர.; இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் கூட்டத்தை முன்னின்று நடத்திய ஆசாத்நகர் ஜமாஅத் தலைவர் முகமது அலி ஜின்னா, எஸ்.டி.பி.ஐ.கட்சி நிர்வாகி அபூபக்கர் சித்திக், முகைதீன் பள்ளி தலைவர் முகமது ராவுத்தர், த.மு.மு.க நகர தலைவர் சம்சுதீன் ஆகிய பேர் 4- பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.