.

Pages

Thursday, January 1, 2015

‎முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல் ‬! ‎நடவடிக்கை எடுக்கத் தயங்கும் காவல்துறை‬ ! ‪‎தமுமுக கண்டனம்‬

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவானோடை கிராமத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே முஸ்லிம்களின் தர்கா ஒன்றும் உள்ளது.

நேற்று (31.12.2014) இரவு சுமார் 11.30 மணியளவில் தர்காவைச் சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவரையும், பள்ளிவாசல் முஅத்தின் முஹம்மது என்பவரையும் 50க்கும் மேற்பட்ட இந்துத் துவாவைச் சேர்ந்த கூட்டத்தினர் செந்தில், சாமி செந்தில், சுரேஷ், ராஜகோபால் போன்ற குறிப்பிடத்தக்க நபர்களோடு மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அருவறுப்பாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், விளக்கு கம்பங்களில் உள்ள விளக்குகளையும் அடித்து நொறுக்கிவிட்டு அருகிலுள்ள தர்காவையும் கடுமையாகத் தாக்கிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும்போது முஸ்லிம் பெண்களையும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளனர். முஸ்லிம்கள் வழமைப்போல் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்து, சட்டம் தன் கடமையைச் செய்யும் என அமைதி காத்து வருகின்றனர்.

தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் முத்துப்பேட்டையைப் பற்றி நன்கு தெரியும். அங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய சூழலில் இந்துத்துவாவினரால் தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு முன்பும் பல தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் காவல்துறை, வழக்குப் பதிவு செய்வதுபோல் போக்கு காட்டிவிட்டு, சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம்கள் போராட்டங்களை மட்டுமே நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்போதும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டால் தேவையற்ற விளைவுகள் வரக்கூடிய காலங்களில் உருவாகும் என நாங்கள் அஞ்சுகிறோம்.

எனவே தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ரவுடித்தனம் செய்தவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.