.

Pages

Tuesday, January 6, 2015

துபாயில் உலக மக்களை ஈர்க்க வரும் “குட்டி ஐரோப்பா" !

பிரம்மாண்டம் என்றாலே அது துபாய் தான், செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள், மிக உயரமான கட்டிடம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த பட்டியலில் இணையவிருக்கிறது ஹார்ட் ஆப் யூரோப் (Heart Of Europe) என்ற பனிப்பொழியும் செயற்கை தீவுகள் நகரம்.

இதனை உருவாக்க Kleindienst என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பனி பொழியக்கூடய‌ பகுதிகளான ஆஸ்திரியா, மொனாக்கோ, ஜெர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் செண்ட். பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற செயற்கை நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Kleindienst நிறுவனம் கூறுகையில்... 
ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் பூமிக்கு அடியில் குளிரூட்டபட்ட குழாய்கள் அமைத்து, மேலிருந்து விழும் பனி உடனே உருகிவிடாமலும், நீண்ட நேரம் அப்படியே இருக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

எனவே இயற்கையாகவே ஐரோப்பிய நகரங்களில் நாம் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் முதன்மை நிர்வாக அதிகாரி ஜோசப் கூறுகையில், 
இது போன்ற தொழில்நுட்பம் உலகில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் முழுவதுமாக வெளிப்புறத்தில் கட்டமைப்பது என்பது இதுவே முதல் முறை. இந்த திட்டத்தை செயல்படுத்த சாதரண‌மாக ஒரு ஷாப்பிங்மாலுக்கு எந்த அளவிலான மின்சாரம் தேவைப்படுமோ அதே அளவிலான மின்சாரம் போதுமானது. அனைத்து அனுமதிகளும் முறையாக பெறப்பட்டு 2016 ல் இந்நகரம் தயாராக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    துபாயில் எப்போதும் கொண்டாட்டம்தான், ஆனால துபாயில் பணியில் ‎இருப்பவர்களின் பல குடும்பங்களுக்கு இங்கு திண்டாட்டம்தான்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.