.

Pages

Tuesday, January 6, 2015

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் இந்நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்!

அதிரை சேதுரோட்டை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மகன் தமீம் அன்சாரி ( வயது 38 ). கடந்த 1986 ம் ஆண்டு முதல் 1993 ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடுநிலை, உயர்நிலை கல்வி பயின்றார். பொறியாளரான இவர் தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தாயகம் திரும்பிய இவர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களிடையே 'அதிரை முதல் அமெரிக்கா வரை தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், கல்வி கற்றலின் அவசியம், புதுமையில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டது குறித்து பாடம் நடத்தினார். இவர் எடுத்த பாடத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்தனர்.

தான் படித்த பள்ளியில் முன்னாள் மாணவர் ஒருவர் ஆர்வத்துடன் இந்நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி வெகுவாக பாராட்டினார். அப்போது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் அஷரப் அலி, சாதிக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி பள்ளியின் முன்னாள் மாணவர் தமீன் அன்சாரி குறித்து அறிமுக உரை ஆற்றினார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி நம்மிடம் கூறுகையில்:
'பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பள்ளியின் முன்னாள் மாணவர் தமீம் அன்சாரி அவர்களின் வளர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இன்று மாணவர்களிடேயே ஆற்றிய உரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மனதார பாராட்டுகிறேன். இவரை போல் பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்பு வகித்து வருகின்றனர். அவர்களும் பள்ளியை தொடர்பு கொண்டு 'பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் மத்தியில் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட கல்வி தொடர்பான முக்கிய அறிவுரைகளை வழங்கலாம். இவற்றை நாங்கள் வரவேற்கிறோம். பள்ளி நிர்வாகம், சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறேன்' என்றார்.

12 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது வரவேற்கத்தக்கது.‎

    இப்படி ஒவ்வொரு முன்னாள் மாணவர்களும் முன்வந்தால், தற்போதுள்ள ‎மாணவர்களின் தீயவைகள் பின் சென்று மறையும் என்பதில் சற்றும் ‎சந்தேகம் இல்லை.‎

    முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து பல பழைய மாணவர்கள் முன் ‎வரட்டும். ‎

    எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், நானும் தயார்.‎

    ‎(நான் வெரி வெரி ஓல்டு மாணவன், பரவா இல்லையா!!??) ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்புடி சொல்லிடீங்க? ஓல்ட் இஸ் கோல்ட் தானே! அப்படி ஒரு ஆர்வம் இருந்தா மாணவர்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய உரைகள் இதோ! மாணவர்கள் சந்திக்கும் சமூக பிரச்சனை அதனை எதிர்கொள்ளும் விதம், தேர்வு சந்திக்கும் முன் மானக்களின் மனநிலை, உயர் கல்விகள் பற்றி தெரிதல், உள்நாடு மற்றும் வெளிநாடு படிப்புக்கான கட்டண சலுகைகள், மொழிகளின் பயன்பாடு, பொருளாதாரம் இப்படி ஏதாவது தலைப்பில் மாணவர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு உக்தி கொடுக்கும், இப்படி செய்தால் ஓல்ட் இஸ் கிரேட் தானே ! முயற்சி பண்ணி பாருங்க !!

      Delete
    2. தேங்க்ஸ் பார் யுவர் ஐடியா.

      Delete
  2. முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சமம், இந்த சமயத்தை ‎மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்க்கு முன்னாள் ‎மாணவர்களும் முன்வரவேண்டும்.‎

    ReplyDelete
  3. இது வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  4. வரவேற்கத் தக்க சிந்தனையும் செயலும் . பலரும் இதைப் பின் தொடர வேண்டும்.

    ReplyDelete
  5. இப்படி ஒவொரு முன்னால் மாணவர்களும் தங்கள்ளுடைய அனுபவங்களை இப்போ உள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டால் பயனுல்லதாக இருக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இப்படி ஒவொரு முன்னால் மாணவர்களும் தங்கள்ளுடைய அனுபவங்களை இப்போ உள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டால் பயனுல்லதாக இருக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புதிய முயற்சி பாராட்டப்பட வேண்டியவை. இப்படி ஒவ்வொரு முன்னால் மாணவர்களும் முன் வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் விழிப்புணர்வு பாடங்களையும் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அழைக்கும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 28 நான் சிங்கப்பூரிலேந்து ஊர்ருக்கு வருகிருகிரேன் வந்து மாணவர்களை சந்திப்போன்
    இப்படிக்கு
    கச்சா வீட்டு ஹாஜா சிங்கப்பூர்

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 28 நான் சிங்கப்பூரிலேந்து ஊர்ருக்கு வருகிருகிரேன் வந்து மாணவர்களை சந்திப்பபேன்
    இப்படிக்கு
    கச்சா வீட்டு ஹாஜா சிங்கப்பூர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.