.

Pages

Sunday, January 4, 2015

துபையில் நடைபெற்ற அதிரை அமீரக ஆசாத் நகர் [தரகர் தெரு] மாதாந்திரக் கூட்டம் !

கடந்த 02/01/2015 வெள்ளிக் கிழமை மாலை துபையில் அதிரை அமீரக ஆசாத் நகர் [தரகர் தெரு] மாதாந்திரக் கூட்டம் புகாரி காக்கா அவர்களின் ரூமில் துபையில் இயங்கும் அதிரை  அமீரக  ஆசாத் நகர் அசோஷியேசன் தலைவர் அயூப்கான் தலைமையில்  சிறப்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தரகர் தெரு ஜும்மா பள்ளி சீரமைப்புப் பணி மற்றும் மஹல்லா நலம் வேண்டி பல விசயங்களும் கலந்து ஆலோசிக்கப்பட்டு பேசப்பட்டது.

இதன் அடிப்படையில் அடுத்த அமர்வு இன்ஷா அல்லாஹ் வரும் 06/02/2015 அன்று டேரா துபாய் மார்க்கோ போலோ ஹோட்டல் பின்புறம் உள்ள சகோதரர் முஜீப் ரஹ்மான் அப்துல் ரஜாக் ரூமில்  நடைபெற உள்ளது.ஆசாத் நகர் [தரகர் தெரு] மஹல்லாவாசிகள் அனைவரும் அக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
அதிரை அமீரக ஆசாத் நகர் அசோஷியேசன் துபாய்.


5 comments:

  1. அராஜகம், கேவலம் இவர்கள் முஸ்லிம்களா? அப்படி என்னன்னு கேட்கிறீங்களா? மையத்தை (மௌத்தானவரை ) இந்த முஹல்லா மையவாடியில் அடக்க கூடாதுன்னு சமீபத்தில் நிர்வாகம் சொல்லியது. நிர்வாகம் சீர்கேட்டால் இங்கே அரசியல் கோஷ்டி போல A ,B ,இருந்தது போக C , D யாக மாறிவிட்டது. தெருவின் இமாமையும் அந்த குருப் தேவைக்கு (நல்லது - கேட்டது )போகாதேன்னு கண்டிப்பு.

    பெருநாள் தொழுகைகள், திருமண வைபவங்கள், மையத் நல்லடக்கம் இவைகள் காவல் துறை முன்னின்று நடந்துவருவது வேதனைக்குரியது. குறுநில மன்னர் போல, ஒருவர் தலைமையில் இருந்த தெருவை ஆண்டுக்கு ஒரு தடவை தெரு பஞ்சாயத் மாறவேண்டும் என அரசு அதிகாரிகள் தீர்மானித்த பிறகு தான் தெரு முன்னேற்றம் அடைந்தது.

    குட்டை குழப்பி நிர்வாகத்திற்கு வந்தவர்கள் 2 1/2 வருடம் ஆகியும் இன்னமும் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க வில்லை. முன்பு இருந்த நிலைமைக்கு தெரு போய்விடுமோன்னு தோணுது. நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிரச்னை தீர்ப்பவராகவும், அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவராக இருக்க வேண்டுமென்பது பொது மக்களின் வேண்டுகோள். இந்நிலை மாறுமா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. .
    பிஸ்மில்லாஹ்

    அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும்.
    கருத்து எழுத எல்லாருக்கும் அனுமதி இருக்கிறது. .எழுதுவதின் நோக்கம், நன்மையான விசயமான நல்ல நோக்கமாக இருக்க வேண்டும்.இதனை எத்தனை மக்கள் பார்ப்பார்கள் என்று நினைக்க வேண்டும்
    .நாம் என்ன நமது தெரு மஹல்லா வாசிகளுக்கு சொல்லுகிறோம் .நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம், நம்மால் என்ன நல்ல செயல் செயய முடியும், .என்று நன்றாக சிந்தித்து எழத வேண்டும்.

    அழைப்பு விடூத்தால் அழைப்பில் கலந்து கொண்டு அந்த அமர்வுக்கு மரியாதை கொடூப்பது தான் சாலசிறந்தது .கண் மூடி கொண்டு எழுதுவது சிறந்து இல்லை .வீரன் என்று அறையில் அமர்ந்து தூங்குவது, பூனை கண்மூடினால் இருட்டு என்று நினைக்குமாம் அது போல் இருகிறது.

    நன்மையான காரியங்கள் நம்மால் என்ன செய்ய முடியும் என்று, நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல் பட திட்டம் போட்டு, நல்ல காரியங்கள் செய்ய, இன்ஷா அல்லா நாம் எல்லாம் ஓன்று படுவோம்.


    ReplyDelete
  3. தரகர் தெரு என்கிற பெயர் அதிரையின் வரலாற்றோடு தொடர்புடைய பெயர். அந்தப் பெயரை ஆசாத் நகர் என்று மாற்றுவது என்ன காரணத்துக்காக என்பதை அன்பான தெருவாசிகள் சிந்திக்க வேண்டும்.
    அதிரையின் ஒவ்வொரு தெருவின் பெயரும் இவ்விதம் வரலாற்றுத் தொடர்புடையவை. ஆப்பக்காரத் தெரு , வாணிகர் தெரு, பிள்ளைமார் தெரு, செட்டித் தெரு, பழஞ்செட்டித்தெரு, ஆறு முகங்கிட்டங்கித் தெரு , வத்தைக்காரத்தெரு என்பவை எல்லாமே வரலாற்றுத் தேன் சுளைகள்.
    ஆகவே காலப்போக்கில் அவைகளை மறைத்துவிடும் முயற்சிகள் வேண்டாமென்று அன்புடன் மட்டுமல்ல நிர்வாகிகளிடம் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்தில் இம்முஹல்லாவை சேர்ந்தவர்களின் பிரதான தொழில் கடல் தொழிலாகும் ஒரு சிலர் விவசாய நெல் அளப்பதை தொழிலாக கொண்டனர் இப்போது ஒருசிலரே கடல் தொழில் உள்ளனர் படித்த மாணவர்கள் வெளிநாடு செல்வதால் இத்தொழில் ஈடுபட யாருக்கும் ஆர்வம் இல்லை.

      வழக்க சொல்லில் தரகர் என்பது இழிவாக கருதியது என்னவோ அந்தப் பெயரை வழக்கத்தில் மாற்றிவருவது அரசு கெஜெட்டில் ஆசாத் நகர் என்று இருப்பதால் தான்.

      ஒரு சிலர் தன்னை தர்க்காத்துக்கொல்லவே நிர்வாகத்தில் இருதுக்கொண்டு மார்க்கத்திற்கு புறம்பான செயல்களை செய்துக் கொண்டு இருக்கிறார்கள், சிறப்பு புலனாய்வு செய்து நீங்களே எழுதுங்களேன்!

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.