26/01/2015 நேற்று பேராவூரணியில் தேசிய வாக்காளர் தின விழா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.வட்டாட்சியர் மாணிக்கவள்ளி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை வட்டாட்சியர் மாணிக்கவள்ளி வழங்கினார்.
விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் மு.சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியை லோகாம்பாள், ஆக்ஸ்போர்டு தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன், ரெத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அருகே வலப்பிரமன்காடு பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர். பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
செய்தி எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.
வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடத்துவது வாக்களார்கள் தங்கள் ஓட்டை செலுத்த வேண்டும் என்பதை வழிவுர்த்திதான். ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கன்னு சொன்னாலும், 144 தடை உத்தரவை மீறி ஒரு ஓட்டுக்கு 1000/- பணம்பட்டுவாடா செய்யப் படுகிறது, இப்படி செய்யப்பட்டதால் இப்ப தமிழ் நாட்டின் அவல நிலைமை காணப் படுகிறது. போட்டி இட கடைசிநாள் என்று அறிவிப்பது போல பணம் கொடுக்க கடைசி நாள் என்று அறிவித்தாலும் ஆச்சர்யம் இல்லை.
ReplyDelete