இந்நிலையில் இன்று காலை வங்கிக்கு செல்லும் இன்டர்நெட் கேபிள் துண்டிப்பால் பணிகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பணம் போட, எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பணம் எடுக்க வந்த பெரும்பாலானோர் சில மணி நேரங்கள் வங்கியின் வளாகத்தில் காத்திருந்தனர்.
இதுகுறித்து தொலைதொடர்பு ஊழியர்கள் தரப்பில் விசாரித்த வகையில்...
'நெடுஞ்சாலை துறையின் சார்பில் அதிரை பேருந்து நிலைய ஈசிஆர் சாலை முதல் 800 மீட்டர் வரையிலான பட்டுகோட்டை செல்லும் சாலையை மேம்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக சாலையின் குறுக்கே கழிவு நீர் செல்ல பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டும் போது தொலைதொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த கேபிள் வழியே செல்லும் அணைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளும் இயங்கவில்லை. இன்று காலை முதல் துண்டித்த கேபிள்களை கண்டறிந்து இணைக்கும் பணிகளில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இன்று மாலைக்குள் இணைப்பு வழங்கப்படும்' என்றனர்.



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நெடுஞ்சாலைத்துறை, சாலையில் தன் வேலையை ஆரம்பிக்கும் முன்பு, தொலை தொடர்பு மற்றும் மின்சார வாரியம் போன்ற நிறுவனகங்களை தொடர்பு கொண்டு செயல் பட்டால் இப்படி அவதூறு நடக்காது.
ஆக மொத்தத்தில் யாரும் யாருடனும் ஒத்துப்போவது கிடையாது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com