இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீதும், தேவாலயத்தின் மீதும் திடீர் தாக்குதலை தொடுத்துள்ளனர். தாக்குதலில் பள்ளிவாசலின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. அதேபோல் தேவாலயத்தின் முகப்பு பகுதியும் சேதமடைந்துள்ளது. ஒரே நேரத்தில் பள்ளிவாசல் மீதும், தேவாலயத்தின் மீதும் தாக்குதல் நடத்திருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் நிர்வாகத்தினர் பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது வேதனைப் பட வேண்டிய செய்தி என்பதை விட வெட்கப்பட வேண்டிய செய்தி.
ReplyDeleteஇதைச் செய்தோர் குடியரசு தினப் பரிசாக செய்திருக்கிறார்களா?
மூன்றாம் நபர் சிண்டு முடித்தல் என்று பெயர் இதற்குத்தானோ ? அமைதியைக் குலைக்க திட்டமிடுகின்றனர்.
ReplyDeleteகுடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் பஸ், ரயில்,விமான நிலையங்களில் தீவிரமாக உள்ளது அதே நேரத்தில் நாட்டில் இருக்கும் வழிபாடு இடங்களுக்கும் தேவை என்பதை மேற்கொண்ட சம்பவம் உணர்த்துகிறது. பிரிவினை வாதிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது.
ReplyDelete