அப்பொழுது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
உலகெங்கும் பல்வேறு சமுதாய மக்கள் வந்து செல்லும் இடமாகவும், தமிழகத்தில் புகழ் பெற்ற தர்காக்களின் ஒன்றாக இருக்கக்கூடிய முத்துப்பேட்டை தர்காக்களின் ஒன்றான அம்மா தர்கா மீது மத வெறி பிடித்த 150-க்கும் மேற்பட்டோர் திடீரென்று உள்ளே புகுந்து சேதமாக்கி உள்ளனர். சுற்று சுவரை தரைமட்டமாக்கி பல பகுதிகளை கல் வீசி சேதமாக்கி உள்ளனர். இதில் மின் கம்பங்கள், மின் விளக்குகள் உடைக்கப்பட்டுள்ளது. அதே போல் அருகில் உள்ள வீடுகளையும் சூரையாடி சென்றுள்ளனர். பலரையும் தாக்கி உள்ளனர். இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். முத்துப்பேட்டை தர்கா என்பது காலம் காலமாக சமூக நல்லினக்கத்துக்குக்கூடிய சிறப்பிடமாக உள்ளது. சமூக நலனையும், பொது அமைதியையும் சீர்குழைக்க விரும்பிய தீய சக்திகள் நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் கடந்த காலங்களில் முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடை பகுதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்காமல் போன காரணத்தினால்தான் இன்று தர்காவின் மீது மிக பெரிய தாக்குதலை அந்த மத வெறி சக்திகள் செய்து இருக்கிறார்கள். எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. இந்த பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் இவர்கள் நலன் கருதி நிரந்தரமாக இங்கு அதிரடி படை போலீசாரை தமிழக அரசு நியமண செய்ய வேண்டும். உடைக்கப்பட்ட தர்காவின் சுற்று சுவரை தமிழக அரசு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதியின் நடவடிக்கை தொடர்ந்து ஒரு சார்ந்து இருப்பதினால்தான் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும். பாராபட்சம் இல்லாத ஒரு நேர்மையான அதிகாரியை நியமணம் செய்ய வேண்டும். இந்த தர்கா தாக்குதலை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க, விடுதலை சிறுத்தை, இடது சாரி கட்சிகள் உட்பட அனைத்து கட்சியினரும் கண்டிக்க வேண்டும். தற்பொழுது தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், திருவாரூர் எஸ்.பி.காளிராஜ் மகேஷ் குமார், மகேஷ்குமார் ஆகியோரை சந்தித்து புகார் தெரிவித்;தோம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அப்படி தவறும் பட்சத்தில் ஒரு வாரம் பொறுத்து மாநிலம் தழுவிய போரட்டத்தில் ஈடுப்படுவோம். மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட கலவரம் நடந்துள்ளது. அதன் தொடர்ச்சிதான் இந்த சம்பவம். பா.ஜ.க தலைவர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்த பிறகு தமிழக பா.ஜ.கவினருக்கு தனி துனிச்சல் ஏற்பட்டுதான் இந்த சம்பவத்தை அறங்கேற்றி இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு தமீமுன் அன்சாரி கூறினார்.
பேட்டியின் போது தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப், டிரஸ்டி தமீமுன் அன்சாரி சாஹிப், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன், நகர தலைவர் சம்சுதீன், ஒன்றிய தலைவர் நைனா முகம்மது, வழக்கறிஞர் தீன்முகம்மது, நிர்வாகி சீமான் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
மதநல்லினத்துக்கு பங்கம் விளைவிக்கும் சமூக விரோதிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் பிரசாரம் பண்ண பிஜேபி ஆட்சியில் மதமாற்றம் நடக்குது, RSS , VHP கட்டுக்குள் வைக்க மோடி தவறிவிட்டார், சொராபுதீன் போலி என்கௌண்டரில் அமித்ஷா விடுவித்தது இந்தியாவில் நீதி கேள்விக்குறியாகி விட்டது.
ReplyDeleteநேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?