.

Pages

Saturday, January 3, 2015

முத்துப்பேட்டை கலவர வழக்கில் கைதானோர் விவரங்கள் !

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த அய்யாத்துரை பாண்டியன்(25), யோகேந்திரன்(22), திலிபன்(22), பாலசுப்பிரமணியன்(28), ஆலங்காடு பாலமுருகன்(25), சின்னாங்கொள்ளை சந்திரன்(22), தம்பிக்கோட்டை அமுதன்(22) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து(19), பெரியசாமி(19), கோசாக்குளத்தெரு பிரவின்ராஜ்(19) ஆகிய மூவரை கைது செய்து தஞ்சாவூர் சிறுவர் சீர்த்திருத்த சிறைக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இந்த கலவரம் தெடாடர்பாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முத்துப்பேட்டை நகர் மற்றும் ஜாம்புவானோடை தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 தினங்களாக தஞ்சாவூர் எஸ்.பி.தர்மராஜ் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி.அன்னார்கலி பேகம் ஆகியோரது தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை 
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.