.

Pages

Saturday, January 24, 2015

அதிரையில் நடைபெற்ற மார்க்க அறிவுத்திறன் போட்டி !

அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாத் சமுதாய நல சேவையகம் 6 ஆம் ஆண்டாக நடத்தும் மார்க்க அறிவுத் திறன் போட்டிகள் நமதூர் நெசவுத்தெருவில் இன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெஸ்டர்ன் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எம்எம்எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். ஆதம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், ஆபிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நெசவுத்தெரு சங்க தலைவர் முஹம்மது மொய்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்சிகள் அனைத்தையும் அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாத் சமுதாய நல சேவையக தலைவரும், ஆதம் நகர் பள்ளி இமாம் மவ்லவி சேக்தாவூத் தொகுத்து வழங்கினார்.

முன்னதாக நேற்று மாலை பள்ளி மாணவர்களுக்கு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. வெளியூர் வேன்கள் மூலம் நிரப்பும் தந்திரம் தெரியாதவர்கள். அதனால் குறைவாகத்தான் தெரியும் கூட்டம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.