.

Pages

Sunday, January 18, 2015

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் உள்ளூர் - வெளிநாடு உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாலோசனை கூட்டம்!

நேற்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சிஎம்பி லேனில் அமைந்துள்ள ஏஎல் மெட்ரிக் பள்ளியில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் உள்ளூர் - வெளிநாடு உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகர் அதிரை அஹமது அவர்கள் தலைமை வகித்து ஆலோசனை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகி ஜமால் முஹம்மது, கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் தலைவர் அப்துல் ரஹீம், செயலாளர் சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

இதன் பிறகு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து விடுமுறையில் தாயகம் திரும்பியவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதில் அஹமது பைசல், காலித், இம்ரான், முஹம்மது யாசின் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் இந்த கூட்டத்தில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் உள்ளூர் உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், ஜமால் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் எதிர்கால வளர்ச்சி திட்டம் மற்றும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலத்தின் கட்டாயம் 'கர்ழன் ஹஸனா' என்ற பெயரை தாங்கியுள்ள கையேடு வழங்கப்பட்டன. அடுத்தக்கூட்டம் எதிர்வரும் [ 06-02-2015 ] அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட காலத்தின் கட்டாயம் 'கர்ழன் ஹஸனா' என்ற பெயரை தாங்கியுள்ள கையேடு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.