தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வேண்டி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஜூலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அது தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஜூலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அது தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.