.

Pages

Saturday, August 1, 2015

அதிரையில் இரத்த பரிசோதனை - சத்துணவு கூடங்களில் சுகாதார துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு !

அதிரையில் இரத்த பரிசோதனை - சத்துணவு கூடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.வி.முத்துசாமி, எஸ்.சந்திரசேகரன், கே.பாஸ்கரன், வி.ரவிச்சந்திரன், கே.காசிநாதன், எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அதிரை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பாத்திரங்களை தூய்மையாக கையாளுதல், சுற்றுபுற தூய்மை, காலாவதியான உணவுப் பொருட்களை தவிர்த்தல், உணவு பொருட்களை சுத்தமான நீரில் கழுவி பாதுகாப்பாக தயாரித்து சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு வழங்குதல், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட் களை எலி மற்றும் பூச்சிகளால் சேதமடையாதவாறு பார்த்துக்கொள்தல்,  ஒரு முறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. சமையல் எரிவாயு உருளை மற்றும் அடுப்புகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல், உணவு விநியோகம், தலைமையாசிரியர் சோதித்த பின்னரே மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும் அதிரையில் இயங்கும் தனியார் இரத்த பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசு கூறும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.