.

Pages

Thursday, August 27, 2015

காதிர் முகைதீன் கல்லூரி மாணவன் பல்கலைகழக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை !

அதிரையை சேர்ந்தவர் பத்ரூஜமான் ஆலிம் இவரது மகன் முஹம்மது ஹுசைனுதீன். சென்ற 2013 - 15 ஆம் கல்வியாண்டில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் முஹம்மது ஹுசைனுதீன் பல்கலைகழக அளவில் முதல் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். நமது கல்லூரிக்கும் - பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், சக மாணவர்கள் - பெற்றோர் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாணவன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும், பாராட்டுதலையும் தொடர்ச்சியாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 

6 comments:

  1. அறிவையும் ஆற்றலையும் வழங்கிய ஏகன் அல்லாஹ் இன்னும் பல சிறப்புக்களையும் உங்களுக்கு வழங்கிட பிரார்த்திக்கின்றேன், மனதார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. My heartfelt congratulations for brother Mohammed Hussainudeen for the highest academic achievements. There are only very few students of Adirai who has scored university level ranks.

    Jazakkallah khair

    B.Ahamed Ameen from Adirai

    ReplyDelete
  3. பல்கலைகழக முதலிடம் படிப்பதற்கே தனி சுகம்.
    வல்லவன் அருள் சூழம் வாழ்த்துக்கள் மலர்ந்து விழும்
    நல்லமைவு நம் கல்லூரியில் நல்லாசிரியர் நிறைவினில்
    வல்லமைகள் வெளிவரும் வருவோர்கள் உன்போலானால்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.